ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை பிளவுபடுத்தவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கின்றார் என்று மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இன்று தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ ரணில் விக்ரமசிங்கவிற்கு நாம் முழுமையான ஆதரவை வழங்கினோம். எமக்கு ஏற்புடையதற்ற செயற்பாடுகளை செய்தாலும், வார்த்தையில் கூட நாம் எதுவும் சொல்லவில்லை. எனினும், கட்சியை பிளவுப்படுத்தியதே எமக்கு கிடைத்த ஆதரவாகும்.
அதனால், எதிர்காலத்தில் நாம் அரசியல் தீர்மானமொன்றை எடுப்போம். நாம் ரணில் விக்ரமசிங்கவிற்கு உண்மையாகவே உதவி புரிந்தோம். அவர் மொட்டு கட்சிக்கு அவ்வாறு செய்யவில்லை.
அவரது பழக்கத்திற்கு அதனை செய்தார். அவரை கொண்டு வரும் போது, நாம் அதனை அறிந்திருந்தோம்.
ஐக்கிய தேசியக் கட்சியை பிளவுப்படுத்தினார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுப்படுத்தினார். நல்லாட்சி அரசாங்கத்தை பிளவுப்படுத்தினார். மக்கள் விடுதலை முன்னணியை பிளவுப்படுத்தினார். புலிகளை பிளவுப்படுத்தினார்.
ரணில் விக்ரமசிங்கவுடன் நாம் இன்றும் கலந்துரையாடுகின்றோம். சரியான இடத்திற்கு வருவாரேயானால், அரசாங்கம் தொடர்பில் கலந்துரையாடுவோம். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைவருடனும் கலந்துரையாடுவோம். அதன் பின்னர் இறுதி தீர்மானத்தை எடுப்போம்.” – என்றார்.