மோடியின் தலைமைத்துவத்தால் தலை நிமிர்ந்த இந்தியா

உலக அரங்கிலே ஜனநாயகம் பற்றி பேசும்போது, இந்தியாவே சிறந்த ஜனநாயக நாடென இன்று உதாரணம் காட்டப்படுவதுடன், அங்கு ஐந்து நட்சத்திர ஜனநாயகம் நிலவுவதாக சர்வதேச சமூகம் பெருமிதம் அடையுமளவுக்கு இந்தியா முற்போக்கான பாதையில் வளர்ந்து நிற்கிறது. பொருளாதார ரீதியிலும் வலுவான நிலையிலும் உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பான தலைமைத்துவமும் இதற்கு பிரதான காரணமாகும்.

2014 ஆம் ஆண்டிலேயே பாரத பிரமராக நரேந்திர மோடி பதவியேற்றார். அவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதாலேயே பொதுத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு வரலாற்று வெற்றி கிடைத்தது. குஜராத் மாநில முதல்வராக பதவி வகித்தபோது சிறப்பாக செயற்பட்டு அனைவரினதும் பாராட்டுகளை பெற்றிருந்த மோடி, பிரதமரான பின்னரும் தமது பணிகளை திறம்படி நிறைவேற்றிவருகின்றார். அதனால்தான் சர்வதேச அரங்கில் பாரத தேசத்தின் புகழ் இன்று ஒங்கி ஒலித்துக்கொண்டிருக்கின்றது.

நரேந்திர மோடி பிரதமராவதற்கு முன்னர், தெற்காசியாவிலேயே பலம்பெரும் சக்தியாக இந்தியா வலம் வந்தது. ஆசியாவிலும் அதன் ஆதிக்கம் இருந்தது. ஆனால் மோடி அரியணையேறிய பின்னர் உலகளவில் இந்தியா ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. பூகோள அரசியலிலும் முக்கிய வகிபாகத்தை வகிப்பதுடன், இந்தியா வல்லரசு நாடு என்ற எண்ணப்பாடும் எல்லோர் மத்தியிலும் உருவாகியுள்ளது.

அரசியலில் அடிமட்டத்திலிருந்து அசுர வளர்ச்சி கண்ட மோடி, தூரநோக்கு சிந்தனை உடையவர். அரசியல்வாதி என்பதற்கு அப்பால் சிறந்த இராஜதந்திரி. சமூக நீதியின்மீது அக்கறை கொண்டவர்,நகத்தால் கிள்ளியெறியக்கூடிய விடயங்களை செய்து முடிப்பதற்கு அவர் ஒருபோதும் கோடரிகளை ஏந்தியது கிடையாது. அந்தளவுக்கு மதிநுட்பம் மிக்கவர். இறங்குவதற்கு முன் பல தடவைகள் சிந்தித்தாலும், ஒரு விடயத்தில் இறங்கிய பின்னர் வெற்றிபெறாமல் திரும்பியதில்லை. அதனால்தான் இந்தியாவை அடுத்தக்கட்டம் நோக்கி கொண்டு செல்வதற்கான நகர்வுகளில் அவர் தற்போது முழுவீச்சுடன் ஈடுபட்டுள்ளார்.

மோடியின் தலைமைத்துவத்தை முக்கியமான வல்லரசு நாடுகள்கூட பாராட்டியுள்ளன. சில நாடுகள் வெளிப்படையாக பாராட்டாவிட்டாலும் மோடியின் தலைமைத்துவம் இந்தியாவுக்கு எவ்வளவு பலம் என்பது அந்நாடுகளுக்கு நிச்சயம் தெரியும். மேற்குலக நாடுகள்கூட சர்வதேச அரசியலில் மோடி தலைமையிலான இந்தியாவின் வகிபாகம் அவசியம் என்பதை இன்று உணர்ந்துள்ளன.

அதனால்தான் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுவருகின்றன. இதற்கு ஆதரவாக மேற்குலகமும் களத்தில் நிற்கின்றன. நிரந்தர உறுப்புரிமை கிடைத்துவிட்டால் ‘வீட்டோ’ அதிகாரமும் வசமாகிவிடும்.

அதுமட்டுமல்ல ஜப்பானில் நடைபெற்ற ஜி – 7 நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டுக்கு மோடியும் அழைக்கப்பட்டிருந்தமை அவரின் தலைமைத்துவத்துக்கு கிடைத்த மற்றுமொரு அங்கீகாரமாகும். ஜி – 7 மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள் பிரதமர் மோடியின் தலைமைத்துவத்தை சிறப்பாக பாராட்டினர். “நீங்கள்தான் மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ள தலைவர்” என அமெரிக்க ஜனாதிபதிகூட பாமாலை சூடியிருந்தார்.

பிரதமர் மோடி ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது, அந்நாட்டு அரச தலைவர், நீங்கள்தான் எனது பொஸ் என மோடியை விளித்திருந்தார். இவ்வாறு பலம்பொருந்திய நாடுகளின் தலைவர்கள், மோடியுடன் நெருங்கிய தொடர்பை பேணுவதற்கு முயற்சிக்கின்றனர். இது இந்தியாவுக்கே எல்லா விதத்திலும் நன்மைகளை வழங்கும்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், உக்ரைன்மீதான ரஷ்ய படையெடுப்பை தடுத்து நிறுத்துவதற்கு ஆரம்பத்தில் பிரதமர் மோடியின் உதவியையே நாடின என்பதும் குறிப்பிடத்தக்கது. உலக அரசியலில் இந்தியா எந்த ஸ்தானத்தில் இருக்கின்றது என்பதற்கு இது சிறந்த எடுத்துகாட்டாகும்.

கொரோனா பெருந்தொற்று சவாலையும் பிரதமர் மோடி வெற்றிகரமாக எதிர்கொண்டார். உலக பொருளாதாரம் சரிந்தபோதிலும் இந்தியாவின் பொருளாதாரம் படுபாதாளத்துக்குள் விழாத வகையில் சிறந்த முகாமைத்துவத்தை அவர் வழங்கினார்.

மோடி பிரதமரான பின்னரே இந்தியாவின் தலா தேசிய உற்பத்தி அதிகரித்துள்ளது. தொழில்நுட்ப துறையிலும் இந்தியா அசுர வளர்ச்சி அடைந்துவருகின்றது. அதாவது மோடியின் கடந்த 9 ஆண்டுகால ஆட்சியானது இந்தியாவுக்கு பொற்காலம் என்றே கூறவேண்டும்.

2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்த இந்தியாவை, இன்றைய இந்தியாவுடன் ஒப்பிடுகையில் பல வகைகளில் மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த 2014-ம் ஆண்டில் மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டார். அதன் பயனையே இந்தியா இன்று ஏதோவொரு விதத்தில் அறுவடை செய்துகொண்டிருக்கின்றது.

இந்தியா இன்று தனிநபர் வருமானம் அதிகரிப்பு, மொத்த தேசிய உற்பத்தி அதிகரிப்பு, தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னேற்றம், ஏற்றுமதி அதிகரிப்பு என சர்வதேச சந்தையிலும் முக்கிய வகிபாகத்தை வகிக்கின்றது. மோடியின் ஆட்சி இன்னும் சில வருடங்களுக்கு தொடரும் பட்சத்தில், இந்தியா மென்மேலும் வளரும் என்பதே பொருளாதார நிபுணர்களின் ஒருமித்த கருத்தாகும்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles