மோடியின் வெற்றியால் இலங்கைக்கும் நன்மை!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றி இலங்கைக்கு சாதகமாக அமையும் என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி கூட்டணி 300 முதல் 350 ஆசனங்களைக் கைப்பறக்கூடும் என எதிர்பார்த்தேன். எப்படி இருந்தாலும் பிரதமர் மோடியின் வெற்றி இலங்கைக்கு நன்மை பயக்கும்.

ஏனெனில் இந்தியாவில் ஸ்தீரமானதொரு ஆட்சி இருக்கும்போது, இலங்கை தொடர்பான கொள்கையை மத்திய அரசே தீர்மானிக்கும்.

சிலவேளை மத்திய அரசு பலவீனமாகி, ஆட்சியமைக்க தமிழ் நாட்டின் உதவி தேவைப்படும்பட்சத்தில் இலங்கை தொடர்பான கொள்கையை தமிழகமே தீர்மானிக்கும். அப்போதுதான் இரு நாட்டுக்கும் இடையிலான உறவில் தாக்கம் ஏற்படும். எனினும், மோடி வெற்றிபெற்றிருப்பது நல்லதே.” – என்றார்.

Related Articles

Latest Articles