“யானை – மொட்டு டீல் காரணமாகவே 2019 இல் தோற்றேன்” – சஜித்

” யானை – மொட்டு டீல் காரணமாகவே 2019 ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்றார்.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் கூறியவை வருமாறு,

” தற்போதைய அரசே 2020 இல் சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல வேண்டாம் என்று கூறியது. அத்துடன், தனது சகாக்களுக்கு 600-700 பில்லியன் வரிச்சலுகைகளை வழங்கியது. இதனால் அரச வருமானம் குறைவடைந்தது. அவ்வாறான செயற்பாடுகள் காரணமாகவே நாடு வங்குரோத்தானது.

2019 ஜனாதிபதித் தேர்தலிலும் அதற்கு முன்னரும் இடம்பெற்ற யானை-மொட்டு டீலினால் கோட்டாபய ராஜபக்சவை வெற்றி பெறச் செய்து நாட்டையே வங்குரோத்தாக்கினர் ,இவர்களின் சட்டவிரோத இணைவு தற்போதைய ஜனாதிபதியின் நியமனத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது.

மொட்டு திருடர்களின் ஆசீர்வாதத்தினால் அல்லாது மக்களின் ஆணையுடனேயே ஐக்கிய மக்கள் சக்தி நாட்டின் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளும்.”  – என்றார்.

Related Articles

Latest Articles