2022 (2023) ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இணையத்தில் நேற்று வெளியாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ்.இந்துக்கல்லூரி இம்முறை கணிதம், விஞ்ஞானம் ஆகிய இரு பிரிவுகளிலும் முதல் 5 இடங்களையும் பிடித்துப் பெரும் சாதனை புரிந்துள்ளது.
இதற்கமைய விஞ்ஞானப் பிரிவில் முறையே ஆனந்தஜோதி வித்தியாசா
கர், கண்ணன் பவிதரன், நாகசே னன் சாரங்கன், தர்மலிங்கம் அமலன், ரகுதாதன் தனுசன் ஆகியோர் முதல் 5 இடங்களையும் பெற்றுள்ளனர்.
கணிதப் பிரிவில் சிறிபண்டாகரன்சிநேகன், லெஸ்லி பாஸ்கரதேவன் அபிசேக், சந்திரசேகரம் அபிசேகன், பகீரதன் திபேக், மொஹமட் நிஸ்பார் மொஹமட் இஸ்சாத் ஆகியோர் முதல் 5 இடங்களையும் பெற்றுள்ளனர்.
அதேவேளை, விமலேஸ்வரன் கிசாலன் 6ஆம் இடத்தைப்பெற்றுள்ளார்.
இதேவேளை, யாழ். இந்துக் கல்லூரியில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர் களில் 33 பேர் 3 பாடங்களிலும் ஏ தர சித்தி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.










