ரஷ்ய படைகள் வெளியேற வேண்டும் – சமரச பேச்சில் உக்ரைன் வலியுறுத்து!

பெலாரசின் கோமல் நகரில் நடைபெற்று வரும் பேச்சின்போது, ரஷ்ய படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என உக்ரைன் வலியுறுத்தியுள்ளது.

ரஷியா- உக்ரைன் போர் 5-வது நாளாக நீடித்து வரும் நிலையில், ரஷியாவின் அழைப்பை ஏற்று இன்று பேச்சில் உக்ரைன் பங்கேற்றுள்ளது. முதலில் பேச்சுக்கு வர மறுத்த உக்ரைன், வேறு சில இடங்களை பரிந்துரைத்து இருந்த நிலையில், தனது முடிவில் இருந்து சற்று பின் வாங்கி பேச்சுக்கு சம்மதம் தெரிவித்தது.

இதன்படி, பெலாரசில் உள்ள கோமல் நகரில் ரஷியா – உக்ரைன் பிரதிநிதிகள் இடையே பிற்பகல் 3.50 மணிக்கு பேச்சு தொடங்கியது. இந்த பேச்சின்போது, ரஷியா உடனடியாக போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும். ரஷிய படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்று உக்ரைன் வலியுறுத்தியுள்ளது.

Related Articles

Latest Articles