ராகலையில் ஐவரின் உயிரை பலியெடுத்த ‘தீ’ – நடந்தது என்ன? (நேரடி ரிப்போட்)

இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராகலை இலக்கம் (01) தோட்ட பிரிவில் மண்ணால் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக தனி வீடு ஒன்று நேற்று (07) இரவு பத்து மணியளவில் தீ பிடித்துள்ளது.

இந்த திடீர் தீ விபத்து சம்பவத்தில் இவ் வீட்டில் வசித்து வந்த ஆறு பேரில் இரண்டு சிறுவர்கள் உட்பட ஐவர் தீயில் சிக்குண்டு உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் தாய், தந்தை மற்றும் மகள், மகளுடைய ஒரு வயது மற்றும் 12 வயது உடைய இரு ஆண் பிள்ளைகள் என ஐவர் தீயில் எரிந்து சம்பவ வீட்டிலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும் சம்பவத்தை கேள்வியுற்ற வீட்டில் அருகில் உள்ளவர்கள் விரைந்து வந்து கூச்சலிட்டு தீயை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர முயற்சித்தும் அது பயனளிக்கவில்லை.

இதன் போது வீட்டின் சுவருகளை உடைத்து எரிந்த நிலையிலான சடலத்தை கண்டுள்ளனர் .

இவ்வாறு உயிரிழந்தவர்களில் ஒருவயது சிறுவனான மோகன்தாஸ் ஹெரோஷனுக்கு நேற்று (07) இரவு முதலாவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த உயிரிழப்பு சம்பவத்தில் இராமையா தங்கையா (வயது 61), அவரின் மனைவி செவனமுத்து லெட்சுமி (வயது 57), ஆகியோருடன், மகளான தங்கையா நதியா (வயது 34) இவரின் பிள்ளைகளான, சத்தியநாதன் துவாரகன் (13), முதல் கணவரின் பிள்ளை) மற்றும் தற்போதைய தந்தையான மோகன்தாஸ் ஹெரோசன் (வயது 01) ஆகியோரே தீயில் கருகி உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.


இதையடுத்து இன்று (08.10.2021) காலை 11.46 மணியளவில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த வலப்பனை நீதிமன்ற நீதவான் டி.ஆர்.எஸ்.குனதாச மரண விசாரணையை முன்னெடுத்தார்.

இதன்போது சம்பவத்தில் உயிர் தப்பிய மகன் தங்கையா இரவீந்திரன் (வயது 30) சடலங்களை அடையாளம் காண்பித்தார்.

பின் சட்ட வைத்தியரின் விசாரணைக்கு பின் சடலங்களை நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டார்.

இதன் பிரகாரம் பகல் 1.23 மணியளவில் சட்ட வைத்தியர் பி.ராஜகுரு வருகைதந்து விசாரணையை மேற்கொண்டார்.

அதன்பின் பகல் 2.05 மணியளவில் சடலங்கள் லொரி ஒன்றின் மூலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சம்பவத்தில் உயிர் தப்பிய தங்கையா இரவீந்திரன் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கும் இராகலை பொலிஸார், நுவரெலியா பொலிஸ் கைரேகை அடையாளப்பிரிவுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

க.கிஷாந்தன்

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles