நுவரெலியா, ஹெபோரஸ்ட் பகுதியில் இருந்து இராகலை நகரை நோக்கி பயணித்த பஸ் இன்று நண்பகல் மாகுடுகல தோட்டப் பகுதியில் வைத்து சுமார் 20 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 10 பேர்வரை நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஏனையோர் ஹைபோரஸ்ட் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். அவர்களும் மேலதிக சிகிச்சைகளுக்காக பிற வைத்தியசாலைகளுக்கு மாற்றப்படவுள்ளனர்.
பஸ் சாரதிக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக சாரதி கட்டுப்பாட்டை இழந்ததனால் இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. இராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
