ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ அணியை வீழ்த்தி, ராஜஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது.
ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் நேற்று நடைபெற்ற 44வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 196 ஓட்டங்கள் குவித்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 76 ரன், தீபக் ஹ_டா 50 ஓட்டங்களையும் எடுத்தனர்.
ராஜஸ்தான் தரப்பில் சந்தீப் சர்மா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.இதையடுத்து 197 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களம் இறங்கியது. ராஜஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாஸ் பட்லர் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் களம் இறங்கினர். இதில் பட்லர் 34 ஓட்டங்களையும், ஜெய்ஸ்வால் 24 ஓட்டங்களையும், அடுத்து வந்த ரியான் பராக் 14 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் துருவ் ஜூரெல் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். அதிரடியாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்தனர். இறுதியில் ராஜஸ்தான் அணி 19 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 199 ஓட்டங்களைப்பெற்று 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.










