லுணுகல சுகாதார பிரிவில் மேலும் 21 பேருக்கு கொரோனா

லுணுகல பிரதேச பொது சுகாதார பிரிவிற்குட்பபட்ட பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் மாதிரி பரிசோதனை பெறுபேறுகளின் அடிப்படையில் இன்று (18/07) 21 தொற்றாளர்கள் உறுதிப்ப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

குறித்த தொற்றாளர்களை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.

இதேவேளை பசறை கோணக்கலை மேற்பிரிவு தோட்டத்தில் 02 தொற்றாளர்கள் உறுதிப்பட்டுள்ளதாக பசறை பிரதேச பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Latest Articles