லெபனானில் தொலைதொடர்பு சாதனங்கள் மீண்டும் வெடிப்பு: 20 பேர் பலி!

லெபனானில் தொலைதொடர்பு சாதனங்கள் மீண்டும் வெடிப்பு: 20 பேர் பலி!
லெபனானில் மீண்டும் தொலைத்தொடர்பு சாதனங்கள் வெடித்ததில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 450 பேர் காயமடைந்துள்ளனர்.

ஹிஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர்களின் வோக்கிடோக்கிகள் வெடித்து சிதறியதால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

பேஜர்கள் வெடித்துச்சிதறியதில் உயிரிழந்தவர்களின் இறுதிநிகழ்வுகளின் போது ஹெஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர்களின் தொலைத்தொடர்பு சாதனங்கள் இவ்வாறு வெடித்துள்ளன.

பெய்ரூட்டின் தென்பகுதியில் உள்ள டகியேவில் இறுதி நிகழ்வில் ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் உட்பட மக்கள் கலந்துகொண்டிருந்தவேளை வெடிப்புசம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

Related Articles

Latest Articles