ஹட்டன் நகரில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்று இன்று (03.11.2020) காலை தொற்று நீக்கி தெளிக்கப்பட்டு தொற்று நீக்கம் செய்யப்பட்டது.
குறித்த தனியார் வங்கியின் முகாமையாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதையடுத்தே, வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக தொற்று நீக்கம் செய்யப்பட்டது.
ஹட்டன் நகரம் தனிமைப்படுத்தப்பட்டதையடுத்து வங்கி முகாமையாளர் கொழும்பில் உள்ள வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவரிடம் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த வங்கியில் பணியாற்றிய ஹட்டன், நோர்வூட், கம்பளை பகுதியை சேர்நதவர்கள் அவர்களின் வீடுகளிலேயே சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்பொழுது மேற்படி வங்கி மூடப்பட்டுள்ளது.
அதன்பின்னர் ஹட்டன் நகரிலுள்ள சகல வீதிகளிலும், பஸ் தரிப்பிடம் உள்ளிட்ட பொது இடங்களிலும் தொற்று நீக்கி தெளிக்கப்பட்டு, தொற்று நீக்கம் செய்யப்பட்டது.
க.கிசாந்தன்