” வடமத்திய மாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவதற்கு தயாராகவே இருக்கின்றேன்.” – இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பி. ஹரிஷன் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
‘ யுகதனவி’ விவகாரத்தால் அரசுக்குள் மோதல் ஆரம்பமாகியுள்ளது. பங்காளிக்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இந்நிலையில் மக்களும் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே உள்ளனர். தேர்தலொன்று நடத்தப்படுமானால் இது தெரியவரும்.
வடமத்திய மாகாண முதல்வர் வேட்பாளராக களமிறங்க நானும் தயார். மக்கள் யார் பக்கம் என்பதை நிரூபித்துக்காட்டுவேன்.”- என்றார்.










