வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கரோலினா பகுதியில் இன்று (10) அதிகாலை பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததால் ஹட்டன் – கொழும்பு, ஹட்டன் – கண்டி ஊடான போக்குவரத்து தடைபட்டது.
இதனையடுத்து வட்டவளை பொலிஸார் மற்றும் பிரதேச வாசிகள் இணைந்து வீதியின் குறுக்கே வீழ்ந்த மரத்தினை வெட்டி அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தனர். இதனையடுத்து போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.
குறித்த மரம் முறிந்து வீழ்ந்ததால் சுமார் 30 நிமிடத்திற்கும் மேல், போக்குவரத்து தடைபட்டிருந்தது. இதனால் கொழும்பு, ஹட்டன், கண்டி வைத்தியசாலைக்களுக்கு சென்ற நோயாளர்கள் மற்றும் பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.