வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது என்று வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா, தோணிக்கல் – ஆலடி வீதியில் உள்ள பலசரக்கு வியாபார நிலையத்தில் இருந்தே மேற்படி சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளரான இரண்டு பிள்ளைகளின் தந்தையான 43 வயதுடைய ரங்கசாமி நேசரத்தினம் என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
தனது குடும்பத்தைப் பிரிந்து தாயாருடன் வசித்து வந்த அவர், வியாபார நிலையத்தில் தங்கி இருந்த நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.










