வாட்ஸ்அப்பில் வரும் போலிகள் : அவதானம்! கொழும்பில் குறிவைக்கப்பட்ட பெண்

வட்ஸ்அப் ஊடாக பண மோசடியில் ஈடுபட்ட நைஜீரிய பிரஜைகள் இருவர் தெகிவளையில் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் கணினி குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைவாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைதாகியுள்ளரன்.

இலங்கை பெண்ணொருவருக்கு பரிசு கிடைத்துள்ளதாகவும், அதற்காக குறிப்பிட்டளவு பணத்தை வைப்பு செய்ய வேண்டும் எனவும் வட்ஸ்அப் ஊடாக சந்தேகநபர்கள் குறுந்தகவல் அனுப்பியுள்ளனர். இதுகுறித்து குறித்த பெண் பொலிசாருக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து கணினி குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணை நடத்தி குறித்த நைஜீரிய பிரஜைகளைக் கைதுசெய்துள்ளதாக பொலிசாருக்கு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் வட்ஸ்அப் பயன்படுத்துபவர்கள் இவ்வாறான போலி குறுந்தகவல்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles