விசாரணைகளை திசை திருப்பவே 2029 இல் நாமல் ஜனாதிபதி என்ற நாடகம் அரங்கேற்றம்

தமக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளுக்கு அஞ்சி, அவற்றை திசை திருப்பும் நோக்கிலேயே ‘2029 ஜனாதிபதி” என்ற கதையைக்கூற ராஜபக்சக்கள் ஆரம்பித்துள்ளனர் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

2029 ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்ச ஜனாதிபதியாவார் என மொட்டு கட்சியினர் கூறிவருவது தொடர்பில் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” 2029 இல் நாமல் ஜனாதிபதி என்ற தகவல் திட்டமிட்ட அடிப்படையிலேயே பரப்பட்டுவருகின்றது. ஜனாதிபதியாவதற்கு முன்னர் உள்ளுராட்சிசபைத் தேர்தலில் ஓரிரு சபைகளிலாவது வென்று ஆட்சி அமைத்திருக்க வேண்டும் அல்லவா? அத்தேர்தலில்கூட அவர்கள் மண்கவ்வினர்.

இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் சிஐடியில் ராஜபக்சக்களுக்கு எதிராக உள்ள விசாரணைகள் உரிய வகையில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. சரியான திசையை நோக்கி விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.

எனவேதான் விசாரணை அதிகாரிகளுக்கு நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தும் நோக்கில், விசாரணையை திசை திருப்பும் வகையில் இப்படியான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. அது பகல் கனவு மாத்திரமே.” -எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles