நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைசெய்த நிலையில் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த ஹிஷாலினியின் மரணம் தொடர்பான விசாரணைகள் திசைதிருப்பப்படுவதாக ஹிஷாலியியின் தாய் ரஞ்சனி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மரணத்துக்கான காரணம் தொடர்பில் ஆராயாமல், வேறு கோணத்தில் பொலிஸாரால் கேள்விகள் எழுப்படுவதாகவும் அவரின் தாய் தெரிவித்தார்.
அத்துடன், பதிலளிக்க முடியாத வகையிலான கேள்விகள்கூட கேட்கப்படுவதாக ஹிஷாலினியின் சகோதரி தெரிவித்தார்.