விபத்தில் இருவர் காயம்!

பதுளை, பண்டாரவளை வீதியில் கும்பல்வெல பகுதியில் இன்று (9) காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

வேனொன்றும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

ஆட்டோ ஓட்டுநரும், ஆட்டோவின் பின்பகுதியில் பயணித்த பயணியொருவருமே காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் தெமோதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles