வீதி விபத்துகளில் 12 மாதங்களுக்குள் 2, 692 பேர் பலி!

இலங்கையில் 2025 ஜனவரி முதல் இதுவரையில் வீதி விபத்துகளால் 2 ஆயிரத்து 692 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 317 ஆல் அதிகரித்துள்ளது எனவும் கூறினார்.

பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யு. ஜி. ஜே. சேனாதீர கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது மேற்படி தகவலை வெளியிட்டார்.

“ 2025 ஆம் ஆண்டில் 2 ஆயிரத்து 545 வீதி விபத்துகள் இடம்பெற்றுள்ளன. 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் விபத்துகளின் எண்ணிக்கை 272 ஆக அதிகரித்துள்ளது. எனவும் அவர் கூறினார்.

Related Articles

Latest Articles