வெலிகம பிரதேச சபை தவிசாளர் சுட்டுக்கொலை!

மாத்தறை, வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று முற்பகல்வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிரதேச சபைக்குள் வைத்தே துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான தவிசாளர், மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மோட்டார் சைக்களில் வந்த இருவரே துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்
.
இவர் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினரென்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles