வைத்தியரின் அலட்சியத்தால் பறிபோன யுவதியின் உயிர்!

கொழும்பு- ராகம போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 28 வயது பெண்ணின் மரணத்திற்கு வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவரே காரணம் என உயிரிழந்த  யுவதியின் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

சம்பவத்தில் கொழும்பு மியூசியஸ் கல்லூரியில் விளையாட்டு ஆசிரியையாகப் பணியாற்றிய இனேஷா எனும் யுவதியே உயிர்ழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

உயிரிழந்த  பெண் 2021ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பித்தப்பைக் கற்களை அகற்றுவதற்கான சத்திரசிகிச்சைக்காக கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு விசேட வைத்தியர் ஹசஞ்சய குணவர்தன தலைமையில் அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் , பின்னர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

மூன்று மாதங்களின் பின்னர், பெண் கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையின் ஐந்தாவது பிரிவிற்கு மாற்றப்பட்டு, பின்னர் ராகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அதன் பின்னர் மீண்டும் தனது வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட நிலையில்  அவர் கிட்டத்தட்ட 5 மாதங்கள் ஒரே இடத்தில் இருக்க வேண்டியிருந்தது, குழாய் உதவியுடன் உணவு மற்றும் பானங்கள் அவருக்கு வழங்கப்பட்டது.

இதனையடுத்து வைத்தியசாலையின் அறிவிப்பின் அடிப்படையில் குறித்த பெண் சத்திரசிகிச்சைக்காக வட கொழும்பு போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல அவரது பெற்றோர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சத்திரசிகிச்சையின் பின்னர் வீடு திரும்பிய அவர் சுவாசக் கோளாறு காரணமாக ராகம போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 18 ஆம் திகதி குறித்த  யுவதி  உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில்  அறுவைசிகிச்சை செய்த அறுவை சிகிச்சை நிபுணரின் அலட்சியத்தால் மரணம் நிகழ்ந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அதேவேளை ஜாஎல, தெலத்துர பிரதேசத்தில் வசிக்கும் யுவதியொருவர் தனியார் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு சுகயீனம் காரணமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னர் செய்தி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles