ஷிராந்தி ராஜபக்ச விசாரணைக்கு அழைப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ச,   பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு (எப்.சி.ஐ.டி.) இன்று (27) அழைக்கப்பட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ச ஆட்சிகாலத்தில் “சிரிலிய” எனும் பெயரில் நடத்திசெல்லப்பட்ட வங்கி கணக்கில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிதி முறைகேடு தொடர்பில் விசாரணை இடம்பெற்றுவருகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காகவே ஷிராந்தி ராஜபக்ச  அழைக்கப்பட்டுள்ளார்.

இன்று முற்பகல் 9 மணியளவில் அவர் (எப்.சி.ஐ.டி.) முன்னிலையாக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles