ஹட்டனில் இருந்து அதிகாலை வேளையில் கொழும்பு நோக்கி புறப்படும் பஸ்களுக்கு முன் கூட்டியே ஆசன ஒதுக்கீடு செய்வதற்கான வசதிகள் செய்து தருவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
ஹட்டன், நோர்வூட், டிக்கோயா கொட்டகலை உள்ளிட்ட பல பிரதேசங்களிலிருந்து கொழும்புக்கு பலர் செல்கின்றனர்.
இவர்கள் அதிகாலை செல்லும் 1.30 மற்றும் 3.15 ஆகிய பஸ்களுக்கு செல்வதற்காக இரண்டு மூன்று மணித்தியாலங்கள் வரிசையில் நின்று செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அதிகமான நேரம் வரிசையில் நிற்பதற்கே செலவிட வேண்டியுள்ளதாகவும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.
அவ்வாறு பல மணித்தியாலங்கள் வரிசையில் நின்றும் ஆசனங்கள் இன்றி உரிய நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுவதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் ஹட்டனிலிருந்து செலவதற்கான இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் ஆசன ஒதுக்கீடு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தால் பயணிகள் எவ்வித அசௌகரியங்களும் இன்றி முன் கூட்டியே தங்களது ஆசனங்களை ஒதுக்கி கொள்வார்கள் என்றும் இதனால் நேரமும் பணமும் வீண் விரையம் ஆவதனை தடுக்கலாம் எனவும் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
மலைவாஞ்ஞன்










