ஹட்டனை சேர்ந்த ஒருவர் உட்பட கொரோனாவால் மேலும் 10 பேர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 7 ஆண்களும், மூன்று பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 445 ஆக அதிகரித்துள்ளது.

ஹட்டன் பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய ஆணொருவரும் உயிரிழந்துள்ளார்.

அதேவேளை, இன்று மாத்திரம் 518  கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles