ஹப்புதளையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது!

ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொட்டுலாகலை தோட்டத்தில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹப்புத்தளை பொலிஸின் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, மேற்படி தோட்டத்துக்கு விரைந்த பொலிஸார் அங்கு சுற்றிவளைப்பு – தேடுதல் நடவடிக்கையில் இறங்கினர்.

இதன்போது வீட்டிலிருந்து 162000 மில்லி லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டதோடு 42 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles