பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ, சாதாரணதரப் பரீட்சையில்கூட (O/L) சித்தியடையவில்லை என இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா கடந்த 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினார்.
இதற்கு பதிலளித்த ஹரின் பெர்ணான்டோ, எனது பரீட்சை பெறுபேறுகளை நான் சபையில் சமர்ப்பிப்பேன். நிமல் லான்சாதான் சித்தியடையவில்லை என குறிப்பிட்டார். அத்துடன் முடியுமானால் தனது பரீட்சை பெறுபேறுகளை நிமல் லான்சா வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இந்நிலையில் தான் உயர்தரத்திலும் சித்தியடைந்துள்ள பரீட்சை பெறுபேறுகளை ஆதாரத்துடன் ஹரின் பெர்ணான்டோ சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து நிமல் லான்சா எப்போது வெளியிடுவார் என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.











