ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டுவந்த பெண் கைது!

திருகோணமலை-ரொட்டவெவ பகுதியில் கேரளா கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண்ணொருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து ,மொரவெவ பொலிஸ் பொறுப்பதிகாரி வசந்த சந்திரலால் தலைமையில் சென்ற குழுவினர் குறித்த பெண்ணின் வீட்டை சோதனையிட்ட போது கஞ்சா பெக்கெட் செய்யப்பட்ட நிலையில் 23 பெக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளதுடன் பெக்கெட் செய்வதற்காக பயன்படுத்தும் இலக்ரோனிக் மெஷின் ஒன்றினையும், பொலித்தீன் சிலவற்றையும், இலக்ட்ரோனிக் தராசு ஒன்றிணையும் கைப்பற்றியுள்ளனர்.

Related Articles

Latest Articles