” மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வே தற்போது அவசியம். மாறாக அக்கிராசன உரைகள் தேவையில்லை.” – என்று சுதந்திர மக்கள் கூட்டணி தெரிவித்துள்ளது.
9 ஆவது நாடாளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்போது ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையை எதிர்த்து சுதந்திர மக்கள் கூட்டணி வெளிநடப்பு செய்தது.
அதன்பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் பீரிஸ் இவ்வாறு குறிப்பிட்டார்.
