அஞ்சி அடிபணியமாட்டேன்: சவாலை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்!

“நான் எதற்கும் அஞ்சமாட்டேன். எனக்கு எதிராக அரசியல் பழிவாங்கலே இடம்பெறுகின்றது. பிரச்சினையை சட்டரீதியாக எதிர்கொள்வேன். நீதி கிடைக்குமென நம்புகின்றேன்.”

இவ்வாறு மொட்டு கட்சி முக்கியஸ்தரான முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

இதற்கு முன்னர் எனக்கு அறிவித்தல் எதுவும் வழங்கவில்லை. நான் ஒளியவும் இல்லை. நேற்று அறிவித்தல் வந்தது, இன்று வாக்குமூலம் வழங்க வந்தேன் எனவும் அவர் கூறினார்.

எப்.சி.ஐ.டியில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று வந்தவேளை ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

எப்.சி.ஐ.டி. விசாரணைக்கு முகங்கொடுக்க முடியாமல், ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ தலைமறைவாகியுள்ளார் என விமர்சனங்கள் எழுந்திருந்தன.

சுதொசவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles