” அடுத்த தேர்தலில் மக்கள் எமக்கே வாக்களிப்பார்கள்”

அடுத்த தேர்தலில் மக்கள் எமக்கே வாக்களிப்பார்கள்: ஜே.வி.பி.போன்று நாம் பொறுப்பற்ற விதத்தில் செயல்படவில்லை!

“எமக்கு கட்சி அரசியலைவிட தாய்நாடுதான் முக்கியம். எனவே, ஜே.வி.பியினர்போன்று நெருக்கடிய சூழ்நிலையிலும் அரசியல் நடத்தி நாட்டுக்கு ஒருபோதும் விளைவிக்கமாட்டோம்.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ நாட்டில் கொரோனா தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்தவேளை, ஜே.வி.பியினர் பொறுப்பற்ற விதத்திலேயே அரசியலை முன்னெடுத்திருந்தனர்.

ஆனால் நாம் தற்போது எதிரணியில் இருந்தாலும் நாட்டுக்கு தீங்கு விளைவிக்ககூடிய எந்தவொரு செயலிலும் ஈடுபடமாட்டோம் .
அடுத்த தேர்தலில் ஜே.வி.பியினரால் ஆட்சிக்கு வரமுடியாது.

எமக்குதான் மக்கள் ஆட்சியை வழங்குவார்கள். எனவே, நாடு நெருக்கடியை சந்திப்பதை நாம் விரும்பவில்லை.

நெருக்கடியான சூழ்நிலைகளின்போது நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிக்கக்கூடிய இயலுமை எமது கட்சிக்கு உள்ளது. போர் காலத்தில் அதனை செய்து காட்டினோம் எனவும் மொட்டு கட்சி செயலாளர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles