தரமற்ற நிலக்கரியால் மின் கட்டணத்தை உயர்த்த அரசு சதி!

தரமற்ற நிலக்கரி பயன்பாட்டினால் ஏற்பட்டுள்ள மின் உற்பத்தி இழப்பை ஈடுசெய்ய, மின்சாரக் கட்டணத்தை அதிகரித்து அந்தச் சுமையை மக்கள் மீது சுமத்த அரசு முயற்சித்து வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சாடியுள்ளார்.

இன்று ஊடகங்களுக்கு விடுத்த விசேட அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“வரலாற்றில் முதல் முறையாகத் தரமற்ற நிலக்கரி பயன்படுத்தப்பட்டமையால், லக்விஜய நுரைச்சோலை மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்பட வேண்டிய 810 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது போயுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, 678 மெகாவோட் மாத்திரமே உற்பத்தியாகியுள்ளது.

* முதல் அலகு: 216 மெகாவோட்
* இரண்டாம் அலகு: 230 மெகாவோட்
* மூன்றாம் அலகு: 232 மெகாவோட்

நிலக்கரி மூலம் மின் உற்பத்தி குறையும் போது, அதிக செலவுடைய எரிபொருள் மின் நிலையங்களை நாட வேண்டிய நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் மேலதிக உற்பத்திச் செலவை, 75 இலட்சம் மின்சார நுகர்வோரிடமிருந்து அறவிட அரசு திட்டமிட்டுள்ளது.

மத்திய கிழக்கின் போர்ச் சூழலை ஒரு சாட்டாகக் கூறி, தவறான தகவல்கள் மூலம் மின் கட்டணத்தை உயர்த்தும் ‘மக்கள் விரோத’ செயலில் அரசு ஈடுபட்டுள்ளது.

நுரைச்சோலையில் தரமற்ற நிலக்கரி பயன்படுத்தப்படுவது குறித்து அரசு நாட்டுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.

அரசின் இந்த மோசடி நடவடிக்கையால் மின் கட்டணத்தை உயர்த்துவது, மக்களுடன் செய்துகொண்ட சமூக உடன்படிக்கையை மீறும் செயலாகும்.” – என்று சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

போரைக் காரணமாகக் காட்டி மின் கட்டணத்தை உயர்த்த அரசு முற்பட்டால், மக்களைத் திரட்டி வீதியில் இறங்கிப் போராடப் போவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles