அதிகரித்துள்ள வெப்பம் காரணமாக தோல் நோய் பாதிப்பு

அண்மைகாலமாக குழந்தைகளிடம் தோல் நோய்கள் அதிகரித்து வருவது குறித்து மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த சிறுவர்  தொடர்பான விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா, நாட்டில் அதிகரித்துள்ள வெப்பம் காரணமாக இது ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இது குழந்தைகளுக்கு கடுமையான நீரழிவை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

எனவே, பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர்கள் அவதானமாக இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Articles

Latest Articles