அன்றும், இன்றும், என்றும் மஹிந்தவே தலைவர் – மொட்டு கட்சி அறிவிப்பு!

” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்சவே. இந்த விடயத்தை தெரியாதவர்கள், இலங்கையில் வாழும் நபராக இருக்க முடியாது. அன்றும், இன்றும், என்றும் அவரே தலைவர்.”

– இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று (01) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அத்துடன், சர்வக்கட்சி அரசமைப்பதற்கு ஜனாதிபதிக்கு மொட்டு கட்சி ஆதரவு வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles