தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளரும், சிரேஸ்ட அறிவிப்பாளர், எழுத்தாளர், சிந்தனையாளர் என பல பரிமாணங்களை எடுத்து, ஊடகத்துறையில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்துக் கொண்ட அப்துல் ஜப்பார் காலமானார்.
இவருடைய அழகு தமிழ் வர்ணணைக்கு எம்ஜிஆர், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் எனப்பலரும் ரசிகர்கள்.
தொலைக்காட்சிகளின் ஆக்கிரமிப்புக்கு முந்தைய வானொலி காலத்தில் தமிழ் கிரிக்கெட் வர்ணணைக்குப் பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. வானொலி ரசிகர்களைத் தன் அழகு தமிழ் வர்ணணையால் கவர்ந்த அப்துல் ஜப்பார் இன்று காலை மறைந்தார். அவருக்கு வயது 81.
சாத்தான்குளத்தைச் சேர்ந்தவரான அப்துல் ஜப்பார் 1980-களில் இந்தியா விளையாடிய பல சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு தமிழில் வர்ணணை செய்துள்ளார். அப்போது வானொலியில் கிரிக்கெட் வர்ணணை செய்துகொண்டிருந்த பலருமே ஆங்கில வார்த்தைகளை கலந்துபேசுவது வழக்கம். ஆனால், அப்துல் ஜப்பாரின் வர்ணணையில் துளி ஆங்கிலம் கலக்காது. அழகு தமிழில், தெள்ளத்தெளிவான தமிழ் உச்சரிப்பில், பரபரப்பான தருணங்களை தன் கணீர்குரல் மூலம் ரசிகர்களுக்கு கடத்தியவர் அப்துல் ஜப்பார்.
இவருடைய அழகு தமிழ் வர்ணணைக்கு எம்ஜிஆர், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் எனப்பலரும் ரசிகர்கள். பிரபாகரன், அப்துல் ஜப்பாரை தமிழீழத்துக்கு நேரில் அழைத்துப் பாராட்டியிருக்கிறார். இந்த அனுபவத்தை புத்தகமாகவும் எழுதியிருக்கிறார் அப்துல் ஜப்பார். சில ஹாக்கி போட்டிகளுக்கும் தமிழில் வர்ணனை செய்திருக்கிறார்.
கிரிக்கெட் காதலனாக, தமிழ் நேசனாக, வர்ணணை உலகில் எல்லோரின் மனங்களையும் கவர்ந்த அப்துல் ஜப்பாரின் புகழ் என்றும் அழியாது!
இலங்கையில் சமாதான பேச்சுவார்த்தைகள் நடந்த காலப்பகுதியில் இந்தியாவில் இருந்து விசேடமாக வரவழைக்கப்பட்டு, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், அறிவிப்பாளர் அப்துல் ஜப்பாரை சந்தித்து பேசியிருந்தமை விசேட அம்சமாகும்.