ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமெனியின் மறைவுக்கு சஜித் இரங்கல்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (04) பிற்பகல் இலங்கையிலுள்ள ஈரான் தூதரகத்திற்குச் சென்று இலங்கைக்கான ஈரானிய தூதரைச் சந்தித்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்சமயம் நடந்து வரும் மோதல்களால் உயிரிழந்த ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமெனி மற்றும் ஈரானியர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்தார்.

நீண்டகால நண்பரான ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு ஈரான் தூதரகத்திற்கு விஜயம் செய்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த விசேட அனுதாப குறிப்புப் பதிவேட்டில், ஈரானிய மக்கள் சார்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது அனுதாபக் குறிப்பைப் பதிவிட்டார்.

இந்தப் பிரச்சினையை மோதல்கள் மூலம் தீர்ப்பது இன்னும் அதிகமான அப்பாவி உயிர்களை இழக்கச் செய்யும். ஆனபடியால், முடிந்தவரை சமாதானத்தை மையமாகக் கொண்டதொரு வேலைத்திட்டத்தை நோக்கி நகருமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்தார்.

Related Articles

Latest Articles