” இலங்கையர்கள் பிளவுபட்டு நிற்பதால்தான் உள்ளக விவகாரங்களில் சர்வதேசம் தலையிடுகின்றது. எனவே, இலங்கையர்களாக முன்னோக்கி செல்ல டயஸ்போராக்கள் முன்வர வேண்டும்.” – என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.
நீதி அமைச்சர் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த அழைப்பை விடுத்தார்.
” ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடர் நடைபெறும் தருவாயில், எமது நாட்டில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. எமது நாட்டுக்கு எதிராக பல சக்திகள் செயற்படுகின்றன. குறிப்பாக போரை முடிவுக்கு கொண்டு வந்ததால் வெளிநாடுகளில் உள்ள இலங்கை டயஸ்போராக்களால் நாட்டுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றனர்.” எனவும் நீதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இரு தரப்புகளும் முட்டிமோதிக்கொண்டு இப்பிரச்சினையை தீர்க்க முடியாது, அவ்வாறு முற்பட்டால் அது பிரச்சினைகளை மேலும் அதிகரிக்கவே செய்யும். எனவேதான் டயஸ்போரா தலைவர்களுடன் பேச்சு நடத்தியுள்ளோம்.
இலங்கையர்கள் என்ற அடிப்படையில் பிரச்சினைகளை உள்நாட்டில் தீர்த்துக்கொண்டு, இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தி, முன்னோக்கி செல்வோம் என அழைப்பு விடுத்துள்ளோம்.” – எனவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.
” இலங்கையில் இன ஐக்கியம், நல்லிணக்கத்துக்காக பல வேலைத்திட்டங்களை அரசு முன்வைத்துள்ளது. காணாமல்போனார் அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது, இழப்பீட்டு பணியகம் செயற்படுகின்றது, நல்லிணக்க செயலணி உருவாக்கப்படும், இதற்கான சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.” – என நீதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.










