இதல்கஸ்ஹின்ன தோட்டத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு வீடுகள்

பதுளை, இதல்கஸ்ஹின்ன தோட்டத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 33 குடும்பங்களுக்கு தலா 12 லட்சம் செலவில் வீடுகளை கட்ட பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச்செயலாளர் செந்தில் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதற்கான அடிக்கல் நாடும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

அடிக்கல் நாடும் நிகழ்வில் பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச்செயலாளர் செந்தில் தொண்டமான், ஊவா மாகாண ஆளுநர் A.J.M.முஷாமில், மேஜர் தெனிபிட்டிய, பேரிடர் அமைச்சின் செயலாளர் மேஜர் சுதந்த ரணசிங்க, பதுளை G.A, ஹல்தமுல்லை பிரதேச சபை தலைவர் அசோக் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

– ஊடகப் பிரிவு

Related Articles

Latest Articles