இனவாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சிக்குள் சிக்க வேண்டாம் – மக்களிடம் அநுர கோரிக்கை

” மக்கள் மத்தியில் இனவாதத்தை விதைத்து பிரித்தாளும் சூழ்ச்சிமூலம் ஆட்சியை தக்கவைப்பதற்கும், பிடிப்பதற்கும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. குருந்தூர் மலை விவகாரம், கஜேந்திரகுமார் எம்.பியின் வீடு சுற்றிவளைப்பு என்பன இவற்றின் அங்கங்களாகும். இந்த பிரித்தாளும் சூழ்ச்சிக்குள் மக்கள் சிக்ககூடாது.” – என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் பொரளை தொகுதி கூட்டத்தில் நேற்று பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” 2005 இல் ரணிலும், மஹிந்தவும் அரசியல் எதிரிகள் என்றனர். 2010 இலும் இருவருக்கிடையிலும் போட்டி என்றனர். 2015 இலும் இரு அணிகளாகவே போட்டியிட்டனர். 2019 இல் இரு அணிகளில் இருந்தனர். ஆனால் 2023 இல் இணைந்து ஆட்சி அமைந்துள்ளனர். இதுதான் இவர்களுக்கிடையிலான அரசியல் டீல். பிளவுபட்டிருப்பதுபோல் காட்டிக்கொள்வார்கள், எனினும், உள்ளுக்குள் இணக்கம் இருக்கும்.

2005 இல் போரை முடிப்பது யார் என்றும், 2010 இல் போரை முடித்தது யார் என்றும் பிரச்சாரம் இடம்பெற்றது, 2015 ஜனாதிபதி தேர்தலில் சர்வாதிகாரமா ,ஜனநாயகமா என பிரச்சாரம் இடம்பெற்றது, 2019 இல் தேசிய பாதுகாப்பு பற்றி பேசப்பட்டது. இதன்மூலம் ஏனைய அனைத்து பிரச்சினைகளும் மூடிமறைக்கப்பட்டன.

மக்கள் இன்று உண்மையை உணர்ந்துள்ளனர். நாட்டில் இரு பிரதான முகாம்கள்தான் உள்ளன. ஒன்று தேசிய மக்கள் சக்தி, அது மக்கள் ஆட்சிக்கான சக்தி. மற்றைய முகாம் ஊழல், மோசடிகளில் ஈடுபடும் அணி. எனவே, தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைந்தால்தான் நாடு முன்னேறும்.

இன்று இனவாதத்தை தூண்டுகின்றனர். பொன்னம்பலம் எம்பியின் வீடு சுற்றிவளைக்கப்படுகின்றது. குருந்தூர் மலை பிரச்சினை வருகின்றது. இவற்றை தோற்கடிக்க வேண்டும். அனைத்து இன மக்களும் சம உரிமை அனுபவிக்கும் வகையில் அமைதியான நாட்டை உருவாக்குவதே எமது எதிர்பார்ப்பு. ” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles