இன்னும் இரு வாரங்களில் சர்வக்கட்சி அரசு! கட்சி தலைவர்களுக்கு அமைச்சு பதவி!!

இன்னும் இரு வாரங்களில் சர்வக்கட்சி அரசு அமையப்பெறவுள்ளதெனவும் இதற்கான பேச்சுகள் வெற்றியளித்துள்ளதெனவும் நம்பகரமான அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

சஜித் பிரேமதாச தலைமையிலான தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் பலரும் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர் என அறியமுடிகின்றது.

சர்வக்கட்சி அரசு உதயமான பின்னர், அமைச்சரவை மீண்டும் மறுசீரமைக்கப்படவுள்ளது.

இதன்போது சர்வக்கட்சி அரசில் அங்கம் வகிக்கும் அனைத்துக்கட்சிகளுக்கும் அமைச்சு பதவிகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles