இன்று மாலை 6 மணி முதல் 4 ஆம் திகதி காலை 6 மணிவரை ஊரடங்கு!

நாடு முழுவதும் இன்று (02) மாலை 6 மணி முதல் 04 ஆம் திகதி காலை 6 மணிவரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அரச தகவல் திணைக்களத்தால் அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

நாடு தழுவிய ரீதியில் நாளை தன்னெழுச்சி போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வந்துள்ளது.

Related Articles

Latest Articles