கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலையால் ஒக்டோபர் 4 ஆம் திகதியில் இருந்து நேற்றுவரை கொழும்பு மாவட்டத்தில் 16 ஆயிரத்து 311பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 101 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் களுத்துறை மாவட்டத்தில் 193 தொற்றாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இரத்தினபுரியில் நேற்று மாத்திரம் 23 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.











