இலங்கை விஜயத்தின்போது தமிழ்க் கட்சிகளை சந்திப்பார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் எதிர்வரும் 20 ஆம் திகதி இலங்கை வருகை தரவுள்ளார் என தெரியவருகின்றது.

இவ்விஜயத்தின்போது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் அவர் பேச்சு நடத்தவுள்ளார்.

அத்துடன், தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் மலையக தமிழ்க் கட்சிகளுடனும் கலந்துரையாடல் நடத்துவார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த வியஜயத்தின் போது இலங்கையில் இந்திய முதலீடுகள் மூலம் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களை விரைவாக மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்துவார் என தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Latest Articles