எதிர்காலத்தில் சந்தா நிச்சயம் நிறுத்தப்படும் – ஜீவன் அறிவிப்பு

“தொழிலாளர்களிடமிருந்து சந்தாபெறும் நடைமுறை எதிர்காலத்தில் நிச்சயம் நிறுத்தப்படும்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

சூரியன் வானொலியில் இன்று (15) ஒலிபரப்பாகிய விழுதுகள் அரசியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜீவன் தொண்டமானிடம் சந்தா தொடர்பில் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

” சந்தா நிறுத்தப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாம் இருக்கின்றோம். ஆனால் காங்கிரஸின் 48 அலுவலகங்கள் இருக்கின்றன. எனவே, அவற்றை கொண்டு நடத்துவதற்கான மாற்றுவழிகள் பற்றி ஆராயவேண்டும். வருமான வழிமுறைகள் கண்டறிந்த பின்னர் எதிர்காலத்தில் நிச்சயம் சந்தா நிறுத்தப்படும்.” என்றும் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

அத்துடன் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவர் யார் என்பதை கட்சியின் தேசிய சபையே தீர்மானிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles