ஐ.தே.க. தலைமைப்பதவியில் மாற்றம்? அடுத்தவாரம் கூடுகிறது செயற்குழு!

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் அடுத்தவாரம் சிறிகொத்தவில் நடைபெறவுள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கான முன்னெடுக்கப்படவேண்டிய வேலைத்திட்டங்கள் உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன.

குறிப்பாக தலைமைப்பதவியில் ஏற்படவுள்ள மாற்றம் குறித்து செயற்குழுக் கூட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது என அறியமுடிகின்றது.

ஐக்கிய தேசியக்கட்சிக்கு 2021 இல் புதிய தலைவரொருவர் நியமிக்கப்படுவார் என்ற அறிவிப்பை 2020 இல் தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்க விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைப்பதவியில் மாற்றம் ஏற்படும்பட்சத்தில் அக்கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கு தமது தரப்பு தயார் என சஜித் அணியும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles