தனமல்வில பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அரம்போகம சுவந்த மாவத்த கம பகுதியில் புத்தல விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ள பட்ட சுற்றிவளைப்பின் போது நபர் ஒருவரிடம் இருந்து 8 கிலோ கிராம் 5 கிராம் கஞ்சா கைப்பற்ற பட்டுள்ளது.
அத்துடன் 24 வயதுடைய அம்பகமுவ தனமல்வில பகுதியை சேர்ந்த நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டு தனமல்வில பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் அம்பலாந்தோட்டை மயுராபுற இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ வீரர் என்பதுடன் குறித்த சந்தேக நபரை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தனமல்வில பொலிஸார் தெரிவித்தனர்.










