காங்கேசன்துறை துறைமுகமும் இந்தியா வசமாகும்: விமல் குற்றச்சாட்டு!

“காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை துறைமுகங்களை இந்தியாவுக்கு வழங்குவதற்குரிய முயற்சி எடுக்கப்பட்டுவருகின்றது. இது தேசத்துரோக நடவடிக்கையாகும்.”

இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் விமல்வீரவன்ச மேலும் கூறியவை வருமாறு,

“ஜே.வி.பியின் செயலாளர் டில்வின் சில்வா இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளார். எதிர்வரும் 19 ஆம் திகதி ஜனாதிபதியும் அங்கு செல்கின்றார்.

இலங்கையிலுள்ள கனிம வளங்களை இந்திய நிறுவனங்களுக்கு வழங்கும் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துவதற்காகவே இவர்கள் டெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்திய விஸ்தரிப்பு வாதத்துக்கு எதிராக அன்று போராடிய ஜே.வி.பியினர் இன்று அடிக்கடி இந்தியா விரைந்து செல்கின்றனர். இங்குள்ள கனிம வளங்களை இந்தியாவுக்கு வழங்குகின்றனர்.

இந்தியாவுடன் திருட்டுதனமாக ஏழு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. அவற்றுள் என்ன உள்ளது என்பது எவருக்கும் தெரியாது.

அதேவேளை, காங்கேசன்துறை துறைமுகத்தையும் விரைவில் இந்திய மயப்படுத்துவதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றது.
காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்குரிய திட்டம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை துறைமுகத்தை எடுத்து 10 ஆண்டுகளுக்கு தமது நிர்வாகத்தை முன்னெடுக்க இந்திய தரப்பு திட்டமிட்டுள்ளது. அதன்பின்னரும் அது அவர்கள் வசமே இருக்ககூடும்.

அடுத்து திருகோணமலை துறைமுகமும் இலக்கு வைக்கப்பட்டுள்ளது. அங்கு இந்தியாவுக்கு ஏற்கனவே எண்ணெய் குதங்கள் உள்ளன.

மிக முக்கிய மர்மஸ்தானம்தான் திருகோணமலை துறைமுகம். அதனையும் இந்தியாவுக்கு வழங்க முயற்சிக்கப்படுகின்றது.

எமது நாட்டு வளங்களை இந்திய மயப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும்.” – என்றார் விமல் வீரவன்ச.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles