கொரோனாவால் மேலும் 44 பேர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 1,132 ஆக அதிகரிப்பு!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 44 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான தகவல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளரின் உறுதிப்படுத்தலுடன் இன்று அதிகாலை அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இதன்படி இலங்கையில் நாளொன்றில் பதிவான அதிகூடிய மரண எண்ணிக்கை இதுவாகும்.

அத்துடன், கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 132 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles