இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை 136 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் 92 பேர் 60 வயதைக்கடந்தவர்களென சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் 10 – 30 வயதுக்கிடைப்பட்ட மூவரும், 31- 40 வயதுக்கிடைப்பட்ட நால்வரும், 41-50 வயதுக்கிடைப்பட்ட 13 பேரும், 51 -60 வயதுக்கிடைப்பட்ட 22 பேரும், 61-70 வயதுக்கிடைப்பட்ட 28 பேரும், 74 வயதுக்கு மேற்பட்ட 64 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில் கொரோனா வைரஸ் 2ஆவது அலைமூலம் நேற்றிரவுவரை (12) 27ஆயிரத்து 743 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
மினுவாங்கொட கொத்தணிமூலம் 3 ஆயிரத்து 59 பேருக்கும், பேலியகொடை கொத்தணிமூலம் 27 ஆயிரத்து 743பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.