‘கொரோனா’வில் இருந்து 14,497 பேர் மீண்டனர் – 5,587 பேருக்கு சிகிச்சை!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 428 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 497 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 5 ஆயிரத்து 587 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 87 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து  171 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles